'+title+'\n' +'\n'+document.getElementById(postid).innerHTML+'\n\n\n' win.document.open(); win.document.write(mytext); win.document.close(); } function AddName(frm) { if (frm.tmpPostBody.value == "") { alert("Please enter some message") return false; } else if (frm.strName.value == "") { alert("Please enter your Name") return false; } else { if(frm.strURL.value != "") frm.postBody.value = " மணிக்கு " + frm.strName.value + " சொன்னது...\n\n"+ frm.tmpPostBody.value ; else frm.postBody.value = " மணிக்கு " + frm.strName.value + " சொன்னது...\n\n"+ frm.tmpPostBody.value ; return true; } }

முகவரி...

பூவேந்திரன்
புதுவை



முகங்கள்...

பூந்தோட்டம்
புதுக்கவிதைகள்
கவிதைகள்


தொகுப்புகள்

August 2004
September 2004


சில இணைப்புகள்

தமிழ்மன்றம்
வலைப்பதிவரங்கம்
செய்திகள்
கிரிக்கெட்
சினிமா சினிமா
மதுரைத்திட்டம்
சுரதா எழுத்துருமாற்றி
கூகிள் தேடுபொறி
திசைகள்
தமிழ் வலைப்பூக்கள்


பார்வையிட்டோர்

Free Web Counter


நன்றிகள்

Blogger
Blogskins
திரு.சாகரன்
தமிழ்மணம்

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet ::
 தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது


Friday, September 03, 2004

என்றென்றும் காதல்.....


என் இதயதேவதையைக்காண
காத்திருந்தேன்..
காந்தி பூங்காவின் புல்வெளியில்..


ஒருமாதம் கழித்து வரும்
மானசீக தெய்வத்தின் தரிசனத்திற்க்காக..
நகங்களை கொறித்தபடி
மரங்களை வெறித்துக் கொண்டிருந்தேன்..


அவளுக்காக காத்திருப்பதில்தான்
எத்தனை சுகம்...


முதல் சந்திப்பில்
முற்றும் இழந்தபின்
முழுதும் அவள்தானென
மூடிவிட்டேன்..
முகங்களைத் தேடும் முயற்சிகளை..


கூட்டம் கூட்டமாய் மக்கள்
சிறகுவிரித்திருந்தாலும்
என் வானதேவதையின்
வரவு மட்டுமே பெரிதாக..


அவள்தான் எனக்கு எல்லாம்..
இன்பம்.. துன்பம்..
அவள் மடிமட்டுமே சரணாலயம்..
தூங்காத இரவுகள்தான்
நிம்மதி தருகின்றன.. அவள் நினைவுகளால்..


என்னை அடிக்கடி தேடி
அலுத்துக்கொள்வேன்..
முழுவதுமாய் அவளே நிறைந்திருப்பதால்
என்னில் என்னைக்காணமல்
அலுத்துக் கொள்வேன்.. ஆனாலும்.. ஆனந்தம்..

அலுப்பின் முடிவில் ஆனந்தம்..

என் ஒவ்வொரு அசைவுக்கும்
அர்த்தம் அறிந்து
தனிஅகராதி போடும் அழகான ராட்சசி..


ஏற்றங்கள் வந்தபோது ஞானியாய்..
பள்ளங்கள் வந்தபோது ஏணியாய்..
எனக்கு எல்லாமுமாய்..


மின்னல் தாக்கிய உணர்வுகள்..

அதோ..
என் நிலா தவழ்ந்தபடி..

நெருங்கியதும் விலகியது கற்பனைத்திரை..
மடிமீது தலைவைத்து படுத்தாள்..
கேசங்கள் கோதியபடி
ஒருமாதத்தின் நிகழ்வுகளை
மென்றுத் தின்றோம்..
நினைவுகளை அசைபோட்டோம்..


ஆறுமணி கிவிட்டது..
இனி அடுத்த மாதம்தான்..


எழுகையில் தடுமாறிய
அவள் கரம்பற்றினேன்..
கலங்(க்)க(ம்) வேண்டாம்..
மரணம் மடிமேல்தானென
கண்ணீரைத் துடைத்தபடி
நடைபோட்டோம்...

சொத்துக்களோடு
எங்கள் காதலையும் கூறுபோட்ட

மகன் வீட்டிற்கு அவளும்..
மகள் வீட்டிற்கு நானும்..



posted by Poo at 9/03/2004 12:14:00 PM (Popup)(Show/Hide) 0 comments

கருத்து சொல்லுங்க:

பெயர்:
URL:

யுனிகோட் தமிழ் இல்லையா? கீழே ஆங்கிலத்தில் டைப் அடிங்க மேல யுனிகோட் தமிழுக்கு மாறும். ஆங்கிலத்தில் கருத்து சொல்ல மேலுள்ள பெட்டியில் மட்டும் டைப் அடிங்க

யுனிகோட் தமிழாக்கம் நன்றி: சுரதாவின் பொங்குதமிழ்

~~~*~~~