'+title+'\n' +'\n'+document.getElementById(postid).innerHTML+'\n\n\n' win.document.open(); win.document.write(mytext); win.document.close(); } function AddName(frm) { if (frm.tmpPostBody.value == "") { alert("Please enter some message") return false; } else if (frm.strName.value == "") { alert("Please enter your Name") return false; } else { if(frm.strURL.value != "") frm.postBody.value = " மணிக்கு " + frm.strName.value + " சொன்னது...\n\n"+ frm.tmpPostBody.value ; else frm.postBody.value = " மணிக்கு " + frm.strName.value + " சொன்னது...\n\n"+ frm.tmpPostBody.value ; return true; } }

முகவரி...

பூவேந்திரன்
புதுவை



முகங்கள்...

பூந்தோட்டம்
புதுக்கவிதைகள்
கவிதைகள்


தொகுப்புகள்

August 2004
September 2004


சில இணைப்புகள்

தமிழ்மன்றம்
வலைப்பதிவரங்கம்
செய்திகள்
கிரிக்கெட்
சினிமா சினிமா
மதுரைத்திட்டம்
சுரதா எழுத்துருமாற்றி
கூகிள் தேடுபொறி
திசைகள்
தமிழ் வலைப்பூக்கள்


பார்வையிட்டோர்

Free Web Counter


நன்றிகள்

Blogger
Blogskins
திரு.சாகரன்
தமிழ்மணம்

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet ::
 தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது


Friday, September 03, 2004

ஆடாத ஆட்டமெல்லாம்...


கருக்கல்ல கடமைன்னு கழனிக்கு..
பத்து மணிக்கெல்லாம் பட பட வண்டியில
பக்கத்து டவுனுக்கு
மத்தியான சாப்பாடு மஸ்தான் கடை பிரியாணி
வாசம் மறக்க வாசக்கடை பீடா..

உடம்பு சூட்டை தனிக்க பகல்ல மோரு..
பணபவுசைக் காட்ட சாயங்கால பீரு..
அரிப்பை அடக்க இராவானா அக்கப்போரு-நான் சிங்கம்டானு
சிங்காரமா சுத்திவந்த சின்னாளம்பட்டி மிராசுதாரு..

அம்புட்டும் அம்சவேணி ஊட்டுலதான்..
அடுக்கடுக்கா வரும்..அடிக்கடி போவேன்..

உறை போட்டாலும் உறை போடறத மறக்கமாட்டேன்
அத்தனை உசாரா இருந்தும்
இப்படி உசுரு போற வியாதி வந்து
ஒத்தையில கிடக்கேன்..

அந்த ஆக்ககங்கெட்ட கதை...

அவசரம்னு ஒரு நாள்..
அசந்து நின்ன அஞ்சலைய
ஆத்தோரமா ஓரம் கட்டினேன்..
பாதியில படக்னு ஞாபகம்
அடிப்பாவி ஆணுற போடலடின்னு
அலறி எழுந்தேன்..
நானென்ன தே.....யாவான்னு கோவப்பட்டா
அந்த பச்சைத் தே....யா..
அந்த சோக்குல -அடடா
தப்பா நெனைச்சிப் பூட்டோமேன்னு
தப்பை முழுசா செஞ்சு முடிச்சேன்..
மூணு முறைன்னு மார்தட்டி மீசை முறுக்கி!!

நான் ஆடற ஆட்டம் பார்த்த அய்யன் ஆத்தா
அடாவடியா அத்தைப் பொண்ணு
கருத்தம்மாவை கட்டாயமா கட்டிவைச்சாங்க..
செக்கச் செவந்த கருத்தம்மாவை
கதற கதற கட்டில்ல போட்டு
பக்குவமா செ....யாக்கினேன்..

ஈரஞ்சு மாசத்துல ஆம்பிள சிங்கமொன்னு..

ஆனாலும் அம்சவேணியை அம்போன்னு விட்டுடல..

அடுத்த மாசமே அடி வயித்துல நெருப்பு..
அந்த இடத்துல எரிச்சல்.

துடிச்சி போனேன்..
தணிச்சி போனேன் -தர்மாஸ்பத்திரிக்கு
தலையில கல்லைப் போட்டாரு
தலமை டாக்டரு..
கல்யாணம் யிடுச்சான்னு
கவலையா கேட்டாரு..
குழந்தையே இருக்குன்னு
குசுகுசுன்னு சொன்னேன்..
நாசமாப் போச்சுடா- அத்தனையும் கூட்டிவா
இரத்த சோதனை பண்ணனும்..

அடம்பண்ண கருத்தம்மாவை
சத்து ஏத்தனும்னு சொல்லி
கூட்டியாந்தேன்.. குமுறிப்போய்ட்டேன்
அந்த புள்ளைக்கும் இருக்காம்..
அடுத்தது இடியா சொன்னாரு
அதுக்கும் இருக்குன்னு..
ஒண்ணும் அறியாம என் ம்பிளை சிங்கம்
சிரிச்சதை பார்த்து அழுதேன் -மொதமுறையா..

ஊருக்கே சோறுபோட்ட நாங்க
இப்போ தனித்தனியா தரவு இல்லத்துல
அடங்கி கிடக்கோம்..

ஆட்டம் போட்ட எனக்கு
எயிட்ஸ்ன்னா என்னான்னு
அணுபவிச்சி தெரிஞ்சிக்கோடான்னு
ஆண்டவன் தந்த தண்டனை..
ஏத்துக்கறேன்..
ஆனாலும் அந்த பரிதாப புள்ளைங்களுக்கும்
தானமா தந்த இந்த படுபாவிய
மன்னிக்கிறது யாருங்க?!!!



posted by Poo at 9/03/2004 12:08:00 PM (Popup)(Show/Hide) 0 comments

கருத்து சொல்லுங்க:

பெயர்:
URL:

யுனிகோட் தமிழ் இல்லையா? கீழே ஆங்கிலத்தில் டைப் அடிங்க மேல யுனிகோட் தமிழுக்கு மாறும். ஆங்கிலத்தில் கருத்து சொல்ல மேலுள்ள பெட்டியில் மட்டும் டைப் அடிங்க

யுனிகோட் தமிழாக்கம் நன்றி: சுரதாவின் பொங்குதமிழ்

~~~*~~~