![]() |
![]() |
![]() |
முகவரி...
பூவேந்திரன்
முகங்கள்...
|
அபலை....அருகில் இருந்தவரை அங்கங்கள் புண்ணானது.. அடுத்தவீட்டு பாட்டிமுதல் ஆழ்மனதுவரை ஆண்டவனை வேண்டியது... பாடையில் போகமாட்டானா படுபாவி!!.. சந்தேக வார்த்தைகள் சரளமாய் சங்கீதம் பாடின.. உன் இதழ் திறந்தால் என் இமை திறக்கும்... செவி திறக்கமாட்டாயாவென இறைவனை திட்டினேன்!!. விபத்தொன்றில் விலகிப்போனாய் விதியின் விளையாட்டால் விதவையானேன்.!!!.. விட்டது தொல்லையென விடிந்தது வெள்ளியென பிரகாசமாய் உதித்தேன்.. உண்மையின் வெளிச்சம் உணர்ந்து கொள்ளாமல்.. உன் உதைவாங்கி அழுதபோது பரிதாபப்பார்வைகள்.. பொட்டிழந்தபின் பரிகாசமானதேன்?!!.. நள்ளிரவில் வீதியில்.. திண்ணையில் படுத்துக்கொள்.. பாசப்பரிவர்த்தனைகள்.. பட்டப்பகலில் படுக்கைக்கு அழைக்கிறது பாடையில் நீ போனபின்...!! கணவனாய்(?!) நீ இருந்தபோது கண்ணனாய் கைகொடுக்க... அண்ணனாய் நின்றிட ஆதரவேயில்லை.. கல்லறையில் நீ கரைந்தபின்!!.... தாலிக்கொடி இருக்கும்போதே தூக்குக்கயிறை முத்தமிட்டிருக்க வேண்டுமோ.. முடிந்தபின் அழுகிறேன்...!! விதவைகளை விரசமாய் பார்க்கும் விகற்பவாதிகள் வீதியெங்கும் இறைந்துகிடக்கும்வரை இறக்கும் பெண்கள் குறையப்போவதில்லை... துச்சமென நினைத்து உயிர் துறந்தாலாவது துச்சாதனப் பார்வைகள் துகிலுரியப்படுமா?!... கல்லானாலும் கணவன்... இதனால்தான் சொல்லப்பட்டதோ?!!!.... posted by Poo at 9/03/2004 12:04:00 PM (Popup)(Show/Hide) 0 comments ![]()
|