'+title+'\n' +'\n'+document.getElementById(postid).innerHTML+'\n\n\n' win.document.open(); win.document.write(mytext); win.document.close(); } function AddName(frm) { if (frm.tmpPostBody.value == "") { alert("Please enter some message") return false; } else if (frm.strName.value == "") { alert("Please enter your Name") return false; } else { if(frm.strURL.value != "") frm.postBody.value = " மணிக்கு " + frm.strName.value + " சொன்னது...\n\n"+ frm.tmpPostBody.value ; else frm.postBody.value = " மணிக்கு " + frm.strName.value + " சொன்னது...\n\n"+ frm.tmpPostBody.value ; return true; } }

முகவரி...

பூவேந்திரன்
புதுவை



முகங்கள்...

பூந்தோட்டம்
புதுக்கவிதைகள்
கவிதைகள்


தொகுப்புகள்

August 2004
September 2004


சில இணைப்புகள்

தமிழ்மன்றம்
வலைப்பதிவரங்கம்
செய்திகள்
கிரிக்கெட்
சினிமா சினிமா
மதுரைத்திட்டம்
சுரதா எழுத்துருமாற்றி
கூகிள் தேடுபொறி
திசைகள்
தமிழ் வலைப்பூக்கள்


பார்வையிட்டோர்

Free Web Counter


நன்றிகள்

Blogger
Blogskins
திரு.சாகரன்
தமிழ்மணம்

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet ::
 தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது


Friday, September 03, 2004

அபலை....


அருகில் இருந்தவரை
அங்கங்கள் புண்ணானது..
அடுத்தவீட்டு பாட்டிமுதல் ஆழ்மனதுவரை
ஆண்டவனை வேண்டியது...
பாடையில் போகமாட்டானா படுபாவி!!..

சந்தேக வார்த்தைகள்
சரளமாய் சங்கீதம் பாடின..
உன் இதழ் திறந்தால்
என் இமை திறக்கும்...
செவி திறக்கமாட்டாயாவென
இறைவனை திட்டினேன்!!.

விபத்தொன்றில்
விலகிப்போனாய்
விதியின் விளையாட்டால்
விதவையானேன்.!!!..

விட்டது தொல்லையென
விடிந்தது வெள்ளியென
பிரகாசமாய் உதித்தேன்..
உண்மையின் வெளிச்சம்
உணர்ந்து கொள்ளாமல்..

உன் உதைவாங்கி அழுதபோது
பரிதாபப்பார்வைகள்..
பொட்டிழந்தபின் பரிகாசமானதேன்?!!..

நள்ளிரவில் வீதியில்..
திண்ணையில் படுத்துக்கொள்..
பாசப்பரிவர்த்தனைகள்..
பட்டப்பகலில்
படுக்கைக்கு அழைக்கிறது
பாடையில் நீ போனபின்...!!

கணவனாய்(?!) நீ இருந்தபோது
கண்ணனாய் கைகொடுக்க...
அண்ணனாய் நின்றிட
ஆதரவேயில்லை.. கல்லறையில் நீ
கரைந்தபின்!!....

தாலிக்கொடி இருக்கும்போதே
தூக்குக்கயிறை
முத்தமிட்டிருக்க வேண்டுமோ..
முடிந்தபின் அழுகிறேன்...!!

விதவைகளை
விரசமாய் பார்க்கும்
விகற்பவாதிகள்
வீதியெங்கும்
இறைந்துகிடக்கும்வரை
இறக்கும் பெண்கள்
குறையப்போவதில்லை...

துச்சமென நினைத்து
உயிர் துறந்தாலாவது
துச்சாதனப் பார்வைகள்
துகிலுரியப்படுமா?!...

கல்லானாலும் கணவன்...
இதனால்தான் சொல்லப்பட்டதோ?!!!....





posted by Poo at 9/03/2004 12:04:00 PM (Popup)(Show/Hide) 0 comments

கருத்து சொல்லுங்க:

பெயர்:
URL:

யுனிகோட் தமிழ் இல்லையா? கீழே ஆங்கிலத்தில் டைப் அடிங்க மேல யுனிகோட் தமிழுக்கு மாறும். ஆங்கிலத்தில் கருத்து சொல்ல மேலுள்ள பெட்டியில் மட்டும் டைப் அடிங்க

யுனிகோட் தமிழாக்கம் நன்றி: சுரதாவின் பொங்குதமிழ்

~~~*~~~