![]() |
![]() |
![]() |
முகவரி...
பூவேந்திரன்
முகங்கள்...
|
முற்பகல் செய்யின்!!!??..எப்படி அழித்தும் மறைய மறுக்கிறது மனதில் பதிந்த மாசு நிறைந்த கோலம்.. அரைகுறை ஆடையுடுத்தி அங்கங்களை வனப்பாக்கி அதரங்கள் குலுங்க எவர்கண் படினும் கவிழ்ந்திட கவர்ச்சி உடையில் கல்லூரி போர்வையில் காளையர்களின் கனவுக்கன்னியாய் வலம் வரத் துடித்தது.. கன்னிதான் நான்.. கற்பழித்துப் போ கண்களால் மட்டுமென கட்டுக்கடங்காமல் நாகரீக மோகத்தால் நகர்வலம் வந்த நாட்கள்... அன்று நான் போட்ட கோலங்கள் மாசு படிந்தவைகளென மனம் உணர்த்தவில்லை.. அனைத்து கொட்டங்களையும் கொட்டிலில் அடைத்து கட்டிலில் மணவாளனிடம் சரணடைந்தேன்... பலனாக பதினெட்டான பருவப்பெண்.. காலைவேளையில் கட்டுடல் காட்டி இறுக்கமான கால்சட்டையில் அந்தரங்ககளை அப்பட்டமாய் ஆட்டி ஓடும் என் செல்லப் பெண்ணைப் பார்க்கையில் மனதில் குற்ற உணர்ச்சிகள் குத்தூசிகளாய்.. எப்படி முயன்றும் அழிக்கமுடியவில்லை.. அன்று நான் போட்ட மா(சு)க்கோலத்தை!!! posted by Poo at 9/03/2004 11:58:00 AM (Popup)(Show/Hide) 0 comments ![]()
|