![]() |
![]() |
![]() |
முகவரி...
பூவேந்திரன்
முகங்கள்...
|
கண்டதும் கா(சா)தல் !!.......
புருவம் உயர்ந்தது..
புலன்கள் இறந்தது.. புன்னகைத்தால் புத்துயிர் - நான் குற்றுயிராய் போனதேனோ?!!.. இருகோடி கவிதைகள்.. ஒரு கோடி இளைஞர்கள்... மாதர்களின் மயக்கத்தில்.. மதியிழந்தவர்கள் மத்தியில் இதயம் தொலைத்தவனாய்... இன்னொருவன்.. பருவம் படுத்தும்பாடில் உருவம் என்றாலே உன் ஞாபகம் மட்டும்தான்.. சுயநினைவில்லாமல் நினைவுகள்!!.. குறும்புப்பார்வை குத்திய வினாடிகள்.. எண்ணுகையில் வியர்வையில் குளிக்கிறது இதயம்!.. தேவதை திருமேனியுடன் காதல்.. தலைக்கனம் போனது.. நான் மனிதனாவென்ற மாபெரும் சந்தேகத்தோடு!!.. உன்னையே ஊற்றாக.. உருவகத்தில் உள்ளமெல்லாம் வெள்ளம்.. திருநாள் மட்டுமல்ல ஒருநாளும் நினைவில் இல்லை.. கண்டதும் வந்ததே.. காதலா.... சாதலா??!! posted by Poo at 9/03/2004 11:48:00 AM (Popup)(Show/Hide) 0 comments ![]()
|