'+title+'\n' +'\n'+document.getElementById(postid).innerHTML+'\n\n\n' win.document.open(); win.document.write(mytext); win.document.close(); } function AddName(frm) { if (frm.tmpPostBody.value == "") { alert("Please enter some message") return false; } else if (frm.strName.value == "") { alert("Please enter your Name") return false; } else { if(frm.strURL.value != "") frm.postBody.value = " மணிக்கு " + frm.strName.value + " சொன்னது...\n\n"+ frm.tmpPostBody.value ; else frm.postBody.value = " மணிக்கு " + frm.strName.value + " சொன்னது...\n\n"+ frm.tmpPostBody.value ; return true; } }

முகவரி...

பூவேந்திரன்
புதுவை



முகங்கள்...

பூந்தோட்டம்
புதுக்கவிதைகள்
கவிதைகள்


தொகுப்புகள்

August 2004
September 2004


சில இணைப்புகள்

தமிழ்மன்றம்
வலைப்பதிவரங்கம்
செய்திகள்
கிரிக்கெட்
சினிமா சினிமா
மதுரைத்திட்டம்
சுரதா எழுத்துருமாற்றி
கூகிள் தேடுபொறி
திசைகள்
தமிழ் வலைப்பூக்கள்


பார்வையிட்டோர்

Free Web Counter


நன்றிகள்

Blogger
Blogskins
திரு.சாகரன்
தமிழ்மணம்

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet ::
 தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது


Friday, September 03, 2004

முதல்நாள்......


ஒரு ஜூன்மாத காலை..
ஜொலிக்கும் சூரியன்
இரசித்தபடி கால்கடுக்க

கல்லூரி பயணிக்க...

மணக்கும் மல்லிகை...
பட்டுப்பாவாடை...

சிநேகிதி சகிதமாய் வந்திறங்கினாய்...

மார்பினில் தழுவியிருந்த
கல்லூரி புத்தகங்கள்
கலவிக்கல்வி கற்று முடித்து
களவுப் புத்தகங்களாய்
கையில் படுத்திருந்த காட்சி
கண்களை காயப்படுத்தியது..

தெற்றுப்பல் எட்டிப்பார்க்க
வெடித்த இதழ்கள்
சிரிப்பைச் சிந்த..
பருக்கள் காணடித்த
உப்பிய கன்னங்களால்
கவர்ந்திழுத்து
காந்தக் கண்களால்
மௌன மொழி பேசினாய்..
சிநேகிதிகள்
சிந்தனையில் மறைந்தார்கள்..

உன் வசீகர புன்னகையின்
ஒளிவெள்ளம் பாய்ந்த பாதிப்பில்
உள்ளம் உருவெடுத்தது
உன் உருவமாய் மறு உருவெடுத்தது..

உன் மொழி கேட்டிட
தவமிருந்த செவியில்
ஆயிரம் சலங்கைகள்
சங்கமித்ததாய்
சந்தோஷ சத்தங்கள்..
உன் கலகல சிரிப்பில்
கற்பிழந்தன என் புலன்கள்..

நிறுத்தம் வந்ததும் இறங்கிப்போனாய்..
இதயத்துடிப்பை
நிமிடமொருமுறை நிறுத்தும்படி
திருத்தம் செய்துவிட்டு..

அந்த நாள்..
கனவிலே கழிந்தது..
முதல்முறையாய்
பகல் கனவு..
பலிக்காவிட்டால்
பலியாவேனென படர்ந்தது
சபதக்கொடி..

மூளைத் தோட்டமெங்கும்
முளைத்தன..
உன் எண்ணச் செடிகள்...
நண்பர்கள்
வேற்றுக்கிரகவாசிகளாய்..
சுவாசமே நீதானென
சக்கரமாய்.. சர்க்கரை நினைவுகளில்..
சுழன்று திளைத்தேன்..

என்னென்ன மாற்றம்..
எண்ணங்கள் வியந்தன..
சிந்தையில் உன் சித்திரம்
செய்யும் வித்தைகள் கண்டு
சிதறிப்போயின சிந்தனைக்கோலங்கள்...

ஒன்றும் புலப்படவில்லை
புலன்கள் அரித்தன..
புலம்பி அழுதேன்..
புரிந்து கொள்ளென சொல்லும் முறை..
விளங்கவில்லை..
அப்படியொரு வழி

இன்றுவரை இல்லையென
தோழி சொன்னாள்..

உன்னை கண்ணில்
படமெடுத்த நான்
மண்ணில் மறைந்தால்தான்
மறுபதிப்புக்கு வாய்ப்புண்டு..
வலிகள் ஒருநாளென்றாலும்
வரலாறுகள் ஒரு யுகம்வரை
தொடரும்...

உன் உருவம் மட்டுமே
உன் விலாசமாய்..
விசனத்தில் தூங்கிப் போனேன்..
கனவில் மீண்டும் இம்சிப்பாயென்ற
நம்பிக்கையோடு...



posted by Poo at 9/03/2004 11:17:00 AM (Popup)(Show/Hide) 0 comments

கருத்து சொல்லுங்க:

பெயர்:
URL:

யுனிகோட் தமிழ் இல்லையா? கீழே ஆங்கிலத்தில் டைப் அடிங்க மேல யுனிகோட் தமிழுக்கு மாறும். ஆங்கிலத்தில் கருத்து சொல்ல மேலுள்ள பெட்டியில் மட்டும் டைப் அடிங்க

யுனிகோட் தமிழாக்கம் நன்றி: சுரதாவின் பொங்குதமிழ்

~~~*~~~