![]() |
![]() |
![]() |
முகவரி...
பூவேந்திரன்
முகங்கள்...
|
வண்ண நிலவே.......நீ வாங்கிவந்த பச்சைப்பட்டுப் பாவாடை படரவிட்டு நடக்கும்போது பஞ்சவர்ணக்கிளி பறப்பதாய்.. ரெட்டைக்கல் பதித்த சிவப்புவண்ண தொங்கட்டான் ஊஞ்சலாடுகையில் எடுப்பாய் இருப்பதாய்.. முத்து மூக்குத்தி மூக்கின்மேலிட்ட விளக்குபோல் கண்ணைக் கூசுவதாய்.. நெற்றிக்கண்ணில் பதித்த மஞ்சள் பொட்டில் மகாலட்சுமியே சிரிப்பதாய்.. பின்னிவிளையாடும் நீலவண்ண ரிப்பன் மேகக்கூந்தலுக்கு ஒட்டியாணமாய்.... செதுக்கிவைத்த செப்புச்சிலையாய்.. அழகுதேவதைக்கு திருஷ்டிப்போடென அடுத்தவீட்டு அத்தை அம்மாவிடம் சொன்னாளே.... அப்பா.. இத்தனை வண்ணமயமான என்னை எப்போது காண்பது நான் - கண்ணில்லா சிறுமி கலங்கிநின்றேன்!!.. posted by Poo at 9/03/2004 11:12:00 AM (Popup)(Show/Hide) 0 comments ![]()
|