![]() |
![]() |
![]() |
முகவரி...
பூவேந்திரன்
முகங்கள்...
|
வேலைக்கு போகும் என் மனைவி!!ஊருக்கு முன்னெழுந்து உலைவைத்து மதிய உணவையும் முடித்து மஞ்சள் பூசிய மங்களவதியாய் தேனீர் கோப்பையோடு என்னை செல்லமாய் எழுப்புகையில் உன் பாசவலையில் சிக்கித் தவிப்பதை அழகாய் உணர்கிறேன்.. நானும் உதவுகிறேன்... நீங்களொரு குழந்தையென -என்னையும் தயார்படுத்தி.. அவளை ஆட்டோவிலும் என்னை அந்தக்கால சைக்கிளிலும் ஏற்றி அணுப்பும் உன் அணுசரனை -அகிலமே உன் அன்புதானென அழத் தோணுகிறது.. தெருமுனை மறையும்வரை கையசைத்து.... அடுத்த அரைமணியில் அவசரகதியில்.. அடித்து பிடித்து அரசுப் பேருந்தில் அலுவலகம் பயணிக்கும் உன்னை நினைத்தால் கண்கள் பனிக்கின்றன.. உன்னை இல்லத்தரசியாய் வைக்கத்தான் ஆசை.. என்ன செய்ய நடுத்தர வர்க்கமென்றால் வேதனைகளை தாங்கும் இன்னல்தரசியாய்த்தான்.... இன்னல்களையும் இன்பமாய் தாங்கும் உன் இதயம்- எனக்கொரு இமயமாய்த்தான் தெரிகிறது..!!! posted by Poo at 9/03/2004 10:54:00 AM (Popup)(Show/Hide) 0 comments ![]()
|