'+title+'\n' +'\n'+document.getElementById(postid).innerHTML+'\n\n\n' win.document.open(); win.document.write(mytext); win.document.close(); } function AddName(frm) { if (frm.tmpPostBody.value == "") { alert("Please enter some message") return false; } else if (frm.strName.value == "") { alert("Please enter your Name") return false; } else { if(frm.strURL.value != "") frm.postBody.value = " மணிக்கு " + frm.strName.value + " சொன்னது...\n\n"+ frm.tmpPostBody.value ; else frm.postBody.value = " மணிக்கு " + frm.strName.value + " சொன்னது...\n\n"+ frm.tmpPostBody.value ; return true; } }

முகவரி...

பூவேந்திரன்
புதுவை



முகங்கள்...

பூந்தோட்டம்
புதுக்கவிதைகள்
கவிதைகள்


தொகுப்புகள்

August 2004
September 2004


சில இணைப்புகள்

தமிழ்மன்றம்
வலைப்பதிவரங்கம்
செய்திகள்
கிரிக்கெட்
சினிமா சினிமா
மதுரைத்திட்டம்
சுரதா எழுத்துருமாற்றி
கூகிள் தேடுபொறி
திசைகள்
தமிழ் வலைப்பூக்கள்


பார்வையிட்டோர்

Free Web Counter


நன்றிகள்

Blogger
Blogskins
திரு.சாகரன்
தமிழ்மணம்

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet ::
 தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது


Friday, September 03, 2004

ஒருதலைக் காதலன்.....


தினமும் பூக்கிறது
என்வீட்டு ரோஜாச்செடி..
ஐந்தறிவுக்குள்ள உணர்வு
உனக்கில்லாமல் போனதின் அர்த்தம்?!..

சூரியன்தான்
எனக்கும் என் உணர்வுகளுக்கும்
உந்துசக்தியாய்..
மாலையில் வீழ்ந்தாலும்
மறுநாள் எழச்சொல்லும்
மாமந்திரம்..

உணவும் உறக்கமும் மட்டுமே
மறந்துவிட்டதென நினைத்தேன்.. - உணர்வுகளும்தான்..
நினைவூட்டுகிறது மரத்துப்போன
உன் மனது...

உன்னில் நானிருக்கிறேன்
என்னில் நீயிருக்கிறாய்
நன்றாக உணர்கிறது
நமக்கும் வெளியே நிற்கும் காதல்....

ஆலயம் செல்லாமல்
கடவுளை கைதொழுகிறேன்.. காதலெனும்...

கடவுளை...

என் தலையணைகள்
கதறியழுகின்றன...
கனக்கிறதாம் கண்ணீர்த் திவலைகள்
தலைச்சுமையைக் காட்டிலும்...

நிலவுக்கு துணையாய்
நியமித்தாய்.. தனியே...
நித்தமும் மௌனமொழிகளால்
கொன்றுவிட்டு போகிறாய்...

உன் இதழ்கள்
காதலென விளித்தாலொழிய
என் இரவுகள்
மொட்டைமாடிகளைவிட்டு
வெளியேறும்....


உணர்வுகளால்
உருவான காதல்... உணர்ந்துகொள்ளும்
காதலை...
உணர்ச்சிகளால் வடிக்கப்பட்ட
உன்னால்
உன் இதயக்கோயிலில்
ஒளியாக்க முடியாதா?!!.....

சொல்.. இல்லையேல்..கொல்..
செய்வதா... செத்து மடிவதா?!!..



posted by Poo at 9/03/2004 10:43:00 AM (Popup)(Show/Hide) 0 comments

கருத்து சொல்லுங்க:

பெயர்:
URL:

யுனிகோட் தமிழ் இல்லையா? கீழே ஆங்கிலத்தில் டைப் அடிங்க மேல யுனிகோட் தமிழுக்கு மாறும். ஆங்கிலத்தில் கருத்து சொல்ல மேலுள்ள பெட்டியில் மட்டும் டைப் அடிங்க

யுனிகோட் தமிழாக்கம் நன்றி: சுரதாவின் பொங்குதமிழ்

~~~*~~~