![]() |
![]() |
![]() |
முகவரி...
பூவேந்திரன்
முகங்கள்...
|
ஒருதலைக் காதலன்.....தினமும் பூக்கிறது என்வீட்டு ரோஜாச்செடி.. ஐந்தறிவுக்குள்ள உணர்வு உனக்கில்லாமல் போனதின் அர்த்தம்?!.. சூரியன்தான் எனக்கும் என் உணர்வுகளுக்கும் உந்துசக்தியாய்.. மாலையில் வீழ்ந்தாலும் மறுநாள் எழச்சொல்லும் மாமந்திரம்.. உணவும் உறக்கமும் மட்டுமே மறந்துவிட்டதென நினைத்தேன்.. - உணர்வுகளும்தான்.. நினைவூட்டுகிறது மரத்துப்போன உன் மனது... உன்னில் நானிருக்கிறேன் என்னில் நீயிருக்கிறாய் நன்றாக உணர்கிறது நமக்கும் வெளியே நிற்கும் காதல்.... ஆலயம் செல்லாமல் கடவுளை கைதொழுகிறேன்.. காதலெனும்... கடவுளை... என் தலையணைகள் கதறியழுகின்றன... கனக்கிறதாம் கண்ணீர்த் திவலைகள் தலைச்சுமையைக் காட்டிலும்... நிலவுக்கு துணையாய் நியமித்தாய்.. தனியே... நித்தமும் மௌனமொழிகளால் கொன்றுவிட்டு போகிறாய்... உன் இதழ்கள் காதலென விளித்தாலொழிய என் இரவுகள் மொட்டைமாடிகளைவிட்டு வெளியேறும்.... உணர்வுகளால் உருவான காதல்... உணர்ந்துகொள்ளும் காதலை... உணர்ச்சிகளால் வடிக்கப்பட்ட உன்னால் உன் இதயக்கோயிலில் ஒளியாக்க முடியாதா?!!..... சொல்.. இல்லையேல்..கொல்.. செய்வதா... செத்து மடிவதா?!!.. posted by Poo at 9/03/2004 10:43:00 AM (Popup)(Show/Hide) 0 comments ![]()
|