![]() |
![]() |
![]() |
முகவரி...
பூவேந்திரன்
முகங்கள்...
|
ஒரு கிராமத்து காதலியின் ஏக்கம்...கணிணிப் பித்தனே... இயந்திர வாழ்க்கைவிட்டு வெளியே வா.. சுதந்திரக் காற்றை சுவாசிப்போம்.. முறையாய் ஒட்டப்பட்ட உன் ஒற்றைவரி மடல் வராதாவென வழியில் விழி கொண்டு தபால்காரருக்கு ஏங்கிய சுகம்.. இண்டர்நெட்டின் இ-மெயிலில் இல்லை... கம்ப்யூட்டர்தானே நவீனமாய்.. காதலுமா??!!.. புறாக்கள் விடும் தூதை இரசித்தேன்.. யாகூவின் யாசித்தலை ஏற்க முடியவில்லை.. இயற்கை வயல்வெளியில் மாராப்பு மடிப்பில் மறைத்து மறுபடியும் மறுபடியும் படித்து இனித்த சுகம்... இயந்திர இ-மெயிலில் இல்லை.. கம்ப்யூட்டர் காலத்தைதானே வென்றது.. காதலையுமா?!!! தென்னை ஓலையில் பொக்கே செய்து.. செட்டி தோட்டத்து ரோஜாப்பூவை ஒட்டி வைத்து ஆற்று சத்தத்தில் பார்த்து ரசித்த சுகம்.... இ-கார்டு என இம்சையாய் சத்தமெழுப்புகையில் இல்லை... என் இதயக் காதலனே.. சுதந்திரக் காற்றை சுவாசிப்போம்.. இயந்திர வாழ்க்கைவிட்டு வெளியே வா... posted by Poo at 9/02/2004 06:36:00 PM (Popup)(Show/Hide) 0 comments ![]()
|