![]() |
![]() |
![]() |
முகவரி...
பூவேந்திரன்
முகங்கள்...
|
ஆசிரியர் தினம்...மனதுக்குள் புயலடித்தபோதெல்லாம் மடியில் தலைவைத்த நினைவுகள்.. கண்ணுக்குள் மின்னலாய் பாய்ந்து என்னை முன்னுக்கு தள்ளிய உன் முயற்சிகள்.. தளரும்போதெல்லாம் தூக்கிப்பிடித்து வானம் கண்ணுக்கெட்டும் தூரம்தானென வந்துவிழுந்த உன் வார்த்தை மழைகள்.. தடுமாறத்துடித்த வாழ்க்கைத்தடத்தை திசைமாற்றி வளமாக்கிய உன் செப்படி வித்தைகள்.. வீழ்வது நீமட்டுமே விதைத்த உன் எண்ணங்களல்ல எல்லா நேரமும் என்னில் சுடரேற்றிய தீப்பொறிகள்.. உன் ஆசைகள் நிராசையாகாமல் ஜெயித்துவிட்டேன்.. வெற்றிக்கனி பறித்த நொடியில்.. குனிந்தபோது குட்டிய விரல்கள்.. கனிந்தபின் கவரவந்த கண்கள்.. விழுந்தபோது விலக்கிய கால்கள்.. எழுந்தபின் அணைக்கும் கரங்கள்.. எதுவும் எனக்கு தெரியவில்லை எல்லாமுமாய் என்னருகே நின்ற என் ஆசானே.. எனக்கெதுவும் தெரியவில்லை உனைவிடுத்து எனக்கெதுவும் தெரியவில்லை !!... posted by Poo at 9/03/2004 05:35:00 AM (Popup)(Show/Hide) 0 comments ![]()
|